சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த (36 வயது) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 12,874,848 ரூபா பெறுமதியான 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்க பிஸ்கட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு 13 இலட்சம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.